Tuesday, September 15, 2009

தம்பிவருவாரு..

வெள்ளதுல மாட்டிய
நெல்லுபயிராய்
வேலிக்குள்ள மாட்டி தவிக்கிறோம்..

மேலெயும் தண்ணி கீலேயும் தண்ணி
காட்டுவெள்ளத்துல மாட்டின இலையா
செத்து புள்ளமக்க மெதக்கையல
கர்பம் கலங்குதய்யா...

ஊரும்கேக்கல உறவும்கேக்கல
நாதியத்து நிக்கிறோம்
நட்டாத்து வெள்ளத்துல...

கழுத்தளவு தண்ணி
வாயளவு வந்துடுச்சி
பேசமுடியாம மூச்சுமுட்டுதய்யா
தப்பிபிழச்சா மிச்சகத சொல்லுறேன்...

கவலபடாதிங்க
தம்பிவருவாரு..

No comments:

Post a Comment