Sunday, July 8, 2012

விருது..

விருது..

இப்போது
ஆயிரமாயிரம் விருதுகள் வாங்கலாம்
இறந்தபின்னும் இருப்பவர் மனதில்
இறவாமல் வாழ்வதே விருது....

இயலாது இறைநிலை என்றாலும்
இயன்றவரை மிருகநிலைக்குச் செல்லாமல்
இதயமுள்ள மனிதரென
மாநிலத்தார் பாராட்ட வாழ்வதே
மானிடப்பண்புக்கு மகத்தான விருது...

இல்லாதவர்களுக்கு இயன்றதைக் கொடுக்க
இதயம் நெகிழ அவர்
இன்சொல் சொல்வாரே அது
இறைதரும் வரத்தைவிட
இன்னுமொருபடி உயரிய விருது...


விருதுகள் மனிதனை ஊக்குவிக்கும்
உற்சாக சக்திதான்-அதற்காக
விருதுகளை தேடிப்பிடித்துப் பறிக்காமல்
கடமைகளைச் செவ்வனே செய்ய
கனிந்து தானே கையில்விழும்
கனியென விருது...


No comments:

Post a Comment