Thursday, September 3, 2009

மனிதநேயம்..

சகமனிதன் சுடப்பட்டு
தலைசிதறி,இரத்தம்பரப்பி
நாதியத்து சாவதை
காணோலியில் காணூம்போது
மனிதம் எங்கேயிருக்கிறது
கவிதை எழுத...

மனிதநேய பண்பு மலரின்று
காகிதப் பூ..
துளைதூர்ந்துபோன
தூயப் புல்லாங்கூழல்.
கருக்கலில் கைவிளக்கில்லாமல்
தெருவில்தேடும் கன்னியப் பொருள்.
அக்கினி வெய்யலில்
ஆற்றில் ஆர்பரித்தொடும் காணல் நீர்..

சுயநலப்பற்று அற்றுப்போனால்
சுயம் விழித்து
எல்லாம் தழைக்கும்
மனிதநேயமும்...

No comments:

Post a Comment