Monday, September 14, 2009

திரு(என் மருமகளுக்காக)


  • திரு! இவள்
    தவமாய் தவமிருந்த நாங்கள்
    உள்ளம் மலர்ந்து
    உயிர் சீவிக்கவந்த
    ஊற்று நீர்...

  • ஆலிலை கிருஷ்ணணாய்
    அப்பாவின் மடியில் ஒய்யாரமாய்
    ஒப்பில்லா அழகுடன்
    தவழும் மஞ்சள் அழகி..


  • கண்ணம்,கைவளையலென
    அன்னையின் திருஷ்டிகழித்தலுடன்
    வாழ்க்கைத் தேடலுடன்
    வாஞ்சையாய் பார்க்கும்
    காந்தக் கண்ணழகி...

  • திருவின் அசைவுகள் அத்தனையும்
    புரியாதவர்களுக்கு செயல்
    புரிந்தவர்களுக்கு தத்துவம்...

1 comment:

  1. நல்லா இருக்குங்க ரமேஷ் "இரு"கவிதைகளும்...

    ReplyDelete