Friday, September 25, 2009

அதுமட்டும் வேண்டாம்..



ஒன்றே குலம்

ஒருவனே தேவன்

யாதும் ஊரே

யாவரும் கேளீர்..

சுத்தமானபேச்சு

சுகாதாரமான கற்று

பகை,புகைய்ற்ற வாழ்வு.

அனைத்திடமும் அனைவரிடமும்

அன்புசெய்து,அன்புசெய்து

எதனிலும் இறையைக் காணல்..

உடுக்கை இழந்தவன் கைபோல

உறவுகள்.

தன் இனத்தை தானே அழிக்காத

விலங்கினும் மேலாய்

மனம் இதமுள்ள மனிதர்கள்..


நாடுகள் எல்லாம் காடுவளர்த்து

சிங்கைப்போல் எங்கும் பசுமை,

உள்ளமும் உலகும் குளுமை,

ஓசோன் என்னென்றும் வளமை...


மனிதத்தை மயானத்துக்கு அனுப்பி

இவையெல்லாம் அற்றுபோகச் செய்யும்

தொற்றுநோய்கள் எதுஎதுவோ

அதுமட்டும் வேண்டாம்...




No comments:

Post a Comment