Friday, March 19, 2010

சேலைக்குள் சிக்கியக் காவிப்பறவை...

அகிலமெங்கும் ஆசிரமக் கூடுகட்டி
படிப்பறிவை பக்குவமாய் பாடம்செய்து
ஞானக்குரல் கொடுத்துவந்த காவிப்பறவை
சேலைக்குள் சிக்கிக்கொண்டதால்
ஊடகங்களுக்கு உற்சாகக் கொண்டாட்டம்...


தலைமறைவு,திரைமறைவுப் பேரம்
கால்தொட்டவர்கள் கல்லெறிதல்
கைகும்பிட்டவர்கள் கழியெடுத்தலென
எங்கும் ஏகமாய் பரபரப்பு....


அடுத்தடுத்த தகவலுக்கு மனம்தாவும்போது
ஆசிரமச்செய்தி மெல்லமெல்ல அடங்கும்.
காவிப்பறவை திசையறிந்து குரல்கொடுக்கும்
மீண்டும் கால்தொட்டு கும்பிடுவார்கள்
கோடிகளைக் கொட்டுவார்கள்...


பெரியாரிசம் புத்தியில் பதியாமல்
புத்தகத்தில் இருக்கும்வரை தொடரும்
ஞானக்குரல்களும்,கல்லெறிதலும்....

1 comment:

  1. நெத்தியடி. கவிதை மிக அருமை.
    மஹாராஜா

    ReplyDelete