Saturday, March 13, 2010

செருக்கு..

தமிழ்பேச தமிழ்பேச மொழித்தாகம் தானேயெடுக்கும்
உமிழ்நீர் உமிழ்நீர் தேனாய் இனிக்கும்
எம்மொழி செம்மொழி என்று கதைக்க
ஆரியத்துக்கு காயாய் எட்டிக்காயாய் கசக்கும்...

தினந்தோறும் தினந்தோறும் தீந்தமிழ் தேன்குடிக்க
தினகரனாய் உடலொளிர்ந்து உயிர் தழைக்கும்
மூத்தக்குடி முத்தமிழை முத்தார கவிவடிக்க
செங்குருதி செம்புனலாய் குதித்து கூத்தாடும்...


சொல் ஒன்றாய் பொருள் பலவாய்
சொக்கனைப்போல் எந்தமிழர் நெஞ்சத்தில் நடனமாடி
இணையில்லா இனியகவி கவிமஞ்சத்தில் விளையாடும்
இறைவிரும்பும் இனியத்தமிழறிவோம் என்பதே செருக்கு...

No comments:

Post a Comment