Friday, March 11, 2011

குற்றவாளி...

ஆசையை அழிக்காமல் மீசையை மழித்து
புத்தனாகப்பேசும் பதர்களுக்கு
பக்தனாகப்போகும் பண்பை
சுத்தமாகக் கழுவியெறிந்தால்
சன்னலை திறக்கவேண்டாம்
மனக்கதவைத் திறக்க இறைவனே வருவான்....

அவர்சரியில்லை இவர்சரியில்லை
புறம்பேசாமல் புன்னகைப் பூத்து
உள்ளே உள்ளேப் பார்க்க
நாமும்கூட குற்றவாளி....

தனிமனித மன ஒழுக்கம்
தரணியெங்கும் மேன்பட்டால்
விலங்கு மனம் ஒடுங்கி
மனிதம் தழைக்கும்......
குற்றம்,குற்றவாளி என்ற சொல்லே
மறந்துபோகும், மறைந்தேபோகும்....
நமக்கு நாமே மெல்ல மெல்ல
உள்ளக் களையெடுக்க
தெள்ளத் தெளிவாகும் எல்லாம்
அன்பே சிவம்......

No comments:

Post a Comment