Sunday, March 20, 2011

கற்றுத்தரும் காடு..


தோழனே!..
மனிதனுக்கு பத்து விரல்
மண்ணுக்குப் பசசை விரல்
காடு...

வெப்பமண்டலக்காடு,ஊசியிலைக்காடு
சதுப்பு நிலக்காடு,மழைக்காடு
இப்படி பலமுகம்,நிறம்,குணம்...

உலகில் மூன்றில் இரண்டுபங்கு
உயிரினமும்,தாவரமும்
உறங்கி விழித்திடவும்
ஒப்பில்லா மூலிகைகளையும் தரும்
மழைக் காடு...

அலைகளை அதன்வழியில் தடுத்து
அதன் ஆட்டம் குறைத்து
சுனாமியை சுருக்குப் பையில்
போட்டுக் கொள்ளும்
அலையாத்திக் காடு...

CO2 வைக் உட்கொண்டு
உயிர்காற்று O2 வை உலகுக்களித்து
இலை, பூ, காய், கனியென
வேர்கூட மூலிகையாய் தந்து
உச்சிமுதல் உள்ளங்கால்வரை
பட்டாலும் பயன்தரும் மரங்களை
உடனே வெட்டி வீழ்த்திவிடுகின்றோம்
மனிதனாய் எண்ணி...

இந்த ஒருசெல் உயிரினம்
உலகில் இல்லை என்றால்
பலசெல் உயிரின்ங்கள் எல்லாம்
செல்லாக் காசு...

நீர் உயரமே! மலர் உயரம்...
காட்டின் உயரமே! மனித வளம்...

No comments:

Post a Comment