Sunday, March 20, 2011

சின்ன சின்ன ஆசை..


ஊர் இல்லா ஆற்றங்கரையில்
உன் காலடித் தடம்பார்த்து
நடக்க வேண்டும்....

நான் போட்டிருக்கும் சட்டையில்
நீ பட்டன் கட்ட
முன் நெற்றியில்
முத்தமிட வேண்டும்..

ஒரு மழை நாளில்
நீ முந்தானைக் குடைப்பிடிக்க
இடைப்பிடித்து நடக்க வேண்டும்..

நீ கண்ணயர்ந்து
தூங்கும்போது
முகம்பார்த்து
ரசிக்கவேண்டும்....

நீ விரலால் தலைக்கோத
வாழ்க்கை நிகழ்வுகளை
மடியில் கிடந்து
பகிர்ந்து கொள்ளவேண்டும்...

நீ மகிழ்ந்து இருக்கும்
கணங்களில்..
பொய்க் கோபமூட்டி
சிணுங்கவைத்து
ச்மாதானம் செய்ய வேண்டும்...

உன்னில் நானும்
என்னில் நீயும்
இறந்த பின்னும்
இருக்க வேண்டும்...

1 comment: