Friday, March 11, 2011

அன்னிய தேசத்து அஞ்சல்..


கண்ணம்மா!..
கவிதை எழுத நினைத்தால்
சிந்தனையாவும் நீ இருப்பதால்
காகிதவரிகளில் உன் பெயரையே
பேனா குஞ்சு பொரிக்கிறது...

வசதிகள் ஏராளம் என்றாலும்
நீ இல்லாதது வசந்தகாலமற்ற
வருடமாகவே உள்ளது..
வேலையும் வெய்யிலும்
உடலைக் கூறுபோட
உனக்காக என்று நினைக்க
உள்ளத்தில் உற்சாகம் பொங்குகிறது..

மாதம்தோரும் வரும்
என் கடிதம் படிக்க
மாதப் பத்திரிக்கை படிப்பதை
தள்ளிவைத்தாயா!!!
நான் கொடுத்து வைத்தவன்..
இப்போதெல்லாம் ரொம்ப சிக்கனம்
முதல் இரவு முத்தத்தையே
கைபேசியில் செலவு செய்கிறேன்..

நான் உன்னை
க்ட்டிலில் கட்டியதால்
தொட்டில் கட்டினாயே
பிள்ளை எப்படி உள்ளான்
அவன் வந்தபோது
நான் வந்தது..

என் போட்டோ பார்த்து
அப்பா என்கிறானா?..
அங்கிள் என்கிறானா?
அப்பா என்றி நீ
படம் பார்த்துச் சொல்லித்தர
அவனுக்கு நானும் ஒரு பாடமா?...

அறிவோடு அன்பையும் ஊட்டு
அன்பில்லா பலம்
அழிவைத்தான் தரும்...
சரி.."கார்"வந்துவிட்டது
கடித்த்தை முடிக்கிறேன்
முத்தங்களுடன்..

No comments:

Post a Comment