Friday, March 11, 2011

பகலில் தோன்றிய நிலவு.....


உலகக் கட்டிட சிகரங்களின்
தலைக்குப் பின்னால்
மறைந்தும், ஒளிந்தும் கிடப்பது
பகல் நிலவு மட்டிமல்ல
பெளர்ணமியும்தான்...

உப்புநீரை வலிந்தெடுத்து
உயிர் தண்ணீர்தரும் வானம்போல்
வெப்பக் கதிர்களை உள்வாங்கி
குளிர்ந்த ஒளிக்கற்றைகளை உலகுக்களிக்கும்
இயற்கையின் குளிர்சாதனமே...
இயற்கை புவிக்களித்த சீதனமே...

தேய்வதும்,வளர்வதுமாய்
வாழ்வியல் தத்துவத்தை நமக்களித்து
வெண்விதவைக் கோலம்பூண்டு
கவனிப்பாரற்று
வானவீதியில் உலாவரும்
பகல்நிலாவாய் உன்னை
பார்க்கும்போது எல்லாம்
உள்ளம் பதைபதைக்கும்
உலகில் இழந்தவர்களுக்கும் இதேநிலைதான்....

இயற்கைத்தாயின் மங்களப் பொட்டே
மிதக்கும் வெள்ளித் தட்டே

உள்ளத்தைப் பார்பதைவிட
உள்ளதைப் பார்பவரே
உலகில் அதிகம்
நாங்கள் அப்படிதான்...

ஆமாம் வடைசுடும் பாட்டியின்
வியாபாரம் எப்படி ???..
வந்துபோகும் விண்கலமனிதர்கள்
கடன்சொல்லாமல் திரும்புகின்றனரா..
"நீல் ஆம்ஸ்ரோங்" காலடித்தடத்தை
பாதுகாப்பாய் வை-நாங்கள்
பழமைக்கதை பேச உதவும்
கால காலத்துக்கும்...

No comments:

Post a Comment