Friday, March 11, 2011

என்னருகில் நீ இருந்தால்..


நீண்டகாலமாய்
வந்துபோகும் வானவில்லுக்கு
உன் இதழ் சிகப்பையிட்டு
மெல்ல மெருகு ஏற்றுவேன்..

பனி உருகும் அண்டார்டிக்காவில்
உன் பார்வைக் குளுமையைப் பரப்பி
உலகை உள்வாங்கும் கடலின்
களவானித்தனத்தை தடுப்பேன்..

பாசாங்கு இல்லாத
இதமான உன் பக்குவப்பேச்சை
இயற்கையோடு பகிர்ந்துகொண்டு
இடர்யில்லாமல் இயங்கச்சொல்வேன்...

நீ தரும் முத்தத்தின் ஈரத்தை
மொத்தமாக சேகரித்து
ஓசோனில் தெள்ளத் தெளித்து
சுத்தப்படுத்தி சுகாதாரமாக்குவேன்...

கன்னியாக்குமரிமுதல் காஷ்மீர்வரை
மனிதர்களிடம் கலந்துபேசி
கங்கையையும், காவேரியையும்
கருத்தொற்றுமையால் இணைத்து
சொல்லோடு செயலும் ஆற்றி
இனிய இந்தியாவை வல்லரசாக்குவேன்...

சகியே!..
என்னருகில் நீ இருந்தால்....

No comments:

Post a Comment