Friday, March 11, 2011

மனம் ஒரு குரங்கு...


மனிதன்னா
அவன் ஆறறிவு படைத்தவன்
என்பதெல்லாம் ஆர்ப்பாட்டம்..

சகமனிதனின் வலி உணராமல்
உணர எத்தனிக்காமல்-அவன்
உடமையை,உள்ளத்தை,உயிரை
எதையுமே பிய்த்துதெரிந்துவிடுகிறான்
மனிதமில்லாமல்...

சகமனிதன் துன்பம்கண்டு
வள்ளலாராய் மனம்கசியாமல்
மனக்கிளையை குதுகுலமாய் ஆட்டி
விகாரமாய் அகப்பல்காட்டி விலங்காய்..

அதேசமயம்
முகத்தில் வருத்தம் காட்டும்
முகமூடி மனிதனாய்....
ஓடும் மனம்
நின்றால் மனிதன்...
அங்குமிங்கும் ஓட
மனம் குரங்குமட்டுமல்ல....
பலம்வாய்ந்த
பலே விலங்கு....

No comments:

Post a Comment