Friday, March 11, 2011

காத்திரு.....


உன்னை சிதைத்தால்
உன்னில் நான் இருப்பதால்
நானும் சிதைவேன்....

உன் விழிப்பார்வையை பிடித்துக்கொண்டு
இருவரும் வாழ்க்கைப் பாதைநெடுகிலும்
பயணிக்கவே....
உன்னைப் பின்தொடர்ந்தேன்...

உயிர் உடலைவிட்டால் என்னவாகும்
உன்னைக் கைகழுவினால்
உன்னை அல்ல என்னை
இழப்பேன்.....

என் உள்ளத்தில் நீயிருக்க
நீ மனம்கலங்கி கண்கலங்கினால்
அது கண்ணீர் அல்ல
எனது உதிரம்...

வரமாட்டேன் என்று அல்ல
வருவேன் எனக்காத்திரு
நம்பிக்கையே வாழ்க்கை....

இனியவளே!..
இணைவோம்
இறையினும் இனிதே வாழ்வோம்...

No comments:

Post a Comment