Sunday, July 8, 2012

நேரமில்லை…


நேரமில்லை…

உள்ளங்கை ரேகையாய்
உயிர்விடும் மூச்சுவரை
உதட்டோடு ஒட்டி உறவாடும்
உதவாக்கரைப் பேச்சு...



வாழ்வின் நெடுந்தூரப் பயணத்தில்
அடிக்கடி சாக்குபோக்குச் சொல்ல
நீக்குப் போக்காய்
நா வழியே வந்துவிழும்
த்தூ..வார்த்தை நேரமில்லை...



நேரமில்லை என்றுச் சொல்லி.
உற்றநண்பன்,உறவு,உடைமையென
பலதும் இழந்தவர் பலபேர்...
சொல்லில் வாய்மையைவிட
பொய்மையே அதிகம்..



தோழனே நீ!
இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும்
மனக்குதிரையை ஓட்டாமல்
நிகழ்காலத்தில் பொருந்தி இருந்தால்,
காலம் உன் கட்டுக்குள் இருக்கும்
அப்போது உன் வெற்றியென்பது
மேகத்தால் மறைக்கமுடியாத சூரியன்
காகிதத்தால் மூடமுடியாத நெருப்பு...



தோழனே!
உயிரோடு இருப்பதல்ல
வாழ்க்கை..
உயிர்ப்போடு இருப்பதுவே
வாழ்க்கை...





No comments:

Post a Comment