Sunday, July 8, 2012

பயணம்..

பயணம்..



நம்

பயணம் மற்றவர்களுக்காக

இயங்குவதாகவும் இருக்கட்டும்..



சகமனிதன் அற்றப் பயணம்

ஊன்றுகோல் அற்றச் சேற்றுப்பயணம்..

காதல்,கருணை அற்றப் பயணம்

காதற்ற ஊசி...



எதிர்காலம் நோக்கியப் பயணத்தில்

புதிய ஊருக்குச் செல்லும்

விழிப்புணர்வோடு...

எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பதுவே

எதார்த்த நிதர்சனம்..



இலக்கற்றப் பயணம் எதுவாயினும்

அது இலவுக்காத்தக் கிளி...

தூங்கிக்கொண்டே தொடுவானத்தை

தொடநினைப்பது நிசத்தை நிசமாக்காது...



நம் வாழ்க்கைப் பயணமென்பது

நாம் இல்லாதபோதும்

நம் இருப்பை உலகில் விட்டுச்செல்லட்டும்

எச்சமாக இல்லாமல் மிச்சமாய்...

No comments:

Post a Comment