Monday, November 16, 2009

புயலாகும் பூ..

வதைமுகாம்களில் மட்டுமல்ல
வங்கக் கடலிலும் தத்தளிக்கிறது
உண்மை உடன்பிறப்புகளின்
உயிர்..

வாய்மையற்ற
நரியின் ஊளையாய் கேட்கிறது
தமிழருக்கான தமிழனின் குரல்...

கவிதையென சிலவரிகள் எழுதியவுடன்
நீர்த்துப் போய்விடுகிறது
நம்மன அரிப்பு..

பூவும்கூட புயலாகும்
தமிழகத் தமிழன்மட்டும் புழுவாய்...




No comments:

Post a Comment