Friday, March 11, 2011

பயணங்கள் முடிவதில்லை..


அவள் மனசும்
இவன் மனசும்
இடமாறிப் பயணம்
"காதல்"..

ஓட்டை விட்டு
குஞ்சுப் பயணம்
"பிறப்பு"..

உடல் கூட்டை விட்டு
உயிர் பயணம்
"இறப்பு"..

கிழக்கு ஆதவன்
மேற்கு நோக்கிப் பயணம்
"நாள்"..

புவி நோக்கி
கார்மேகம் பயணம்
"மழை"..

மண்ணைவிட்டு
விண்ணை நோக்கியப் பயணம்
"விண்ணியல்"..

இடம்விட்டு
இடம் பயணம்
"இயக்கம்"...

மண்ணை துளைத்தும்
விண்ணை துளைத்தும்
தன் பயணம் அறியாத
பொற்கால மனிதனின்
பயணங்கள் முடிவதில்லை..
சனியன்று(03-07-2010)சிங்கப்பூர் கவிச் சோலையில் நடந்த கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்றது..

No comments:

Post a Comment